இந்தியா
நடுவானில் பயணி மரணம்.. டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பி வந்த விமானம்
பயணி மரணம் அடைந்ததையடுத்து மருத்துவ அவசரம் கருதி டெல்லி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நேவார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த அமெரிக்க பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பி வந்தது.
மருத்துவ அவசரம் கருதி டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்கு வந்தனர். அந்த பயணியை பரிசோதனை செய்து, அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.