இந்தியா
ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 8-ந் தேதி மும்பை வருகை

Published On 2021-12-04 03:03 GMT   |   Update On 2021-12-04 03:03 GMT
22-வது ஏவுகணையை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மும்பைக்கு வருகிற 8-ந்தேதி வருகை தருகிறார்.
மும்பை :

மும்பையில் நேவல் டாக்யார்டு ரோடு பகுதியில் கடற்படை தளத்தில் கில்லர் ஸ்குவாட்ரான் என்று அழைக்கப்படும் 22-வது ஏவுகணையை கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மும்பைக்கு வருகிற 8-ந்தேதி வருகை தருகிறார்.

கடற்படை நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ராய்காட் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் உருவசிலைக்கு மரியாதை செலுத்த ராய்காட் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News