இந்தியா
ஊரடங்கு

டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு - குஜராத் அரசு அறிவிப்பு

Published On 2021-11-30 23:26 GMT   |   Update On 2021-11-30 23:26 GMT
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அகமதாபாத்:

உலக அளவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநில அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, குஜராத்தின் 8 பெரிய நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு (அதிகாலை 1 மணி முதல் 5 மணிவரை) நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

Tags:    

Similar News