செய்திகள்
சரண்ஜித் சிங் சன்னி, கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் ஏமாற்றுக்காரர்: பஞ்சாப் முதல்வர் கடும்தாக்கு

Published On 2021-11-30 15:38 GMT   |   Update On 2021-11-30 15:38 GMT
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அளித்திருந்த நிலையில், அம்மாநில முதல்வர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறது. பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிட தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கெஜ்ரிவால் பஞ்சாப் சென்றிருந்தார். அப்போது, பஞ்சாப் பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுக்காரர் என கடும் விமர்சம் செய்துள்ளார்.

இதுகுறித்து சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில் ‘‘ஆம் ஆத்மி கட்சி பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது. பொய்யான உத்தரவாதம் அளித்துள்ளது. அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் பொய் மூட்டை.

அரவிந்த் கெஜ்ரிவால் ஏமாற்றுக்காரர். அவருடைய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் டெல்லி மக்களுக்குக்கூட நன்மை தரக்கூடியது அல்ல. அப்படியிருக்கும்போது, பஞ்சாப் பற்றி பேச என்ன இருக்கிறது?. டெல்லியில் 400 யுனிட் வரை மின்சாரம் இலவசம் என்று கூறினார். அது தந்திரம். 400 யுனிட் தாண்டினால், அதன்பின் அதிகமாக கட்டணத்தை டெல்லி அரசு வசூலிக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News