செய்திகள்
விபத்து

அடையாளம் தெரியாத வாகனம் மோதி 5 பேர் பலி

Published On 2021-11-29 10:08 GMT   |   Update On 2021-11-29 10:08 GMT
பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மிது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிரயாக்ராஜ்:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கங்காபார் நவாப்கஞ்ச் காவல் சரகத்திற்கு உட்பட்ட பதானா கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று இரவு பேருந்துக்காக காத்திருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்கள் ராம் சரண் பால் (65), லல்லு பால் (45), சமே லால் பால் (35), அர்ஜுன் பால் (14), ராம் சந்தர் பால் (60) என அடையாளம் தெரிந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags:    

Similar News