செய்திகள்
மக்களவை

எதிர்க்கட்சிகள் முற்றுகை: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

Published On 2021-11-29 06:09 GMT   |   Update On 2021-11-29 06:09 GMT
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என கருதப்பட்டது.

இந்நிலையில், மக்களவை தொடங்கிய உடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

மேலும், அவர்கள் தொடர் முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்.. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி


Tags:    

Similar News