செய்திகள்
விபத்துக்குள்ளான வேன்

மேற்கு வங்காளத்தில் கோர விபத்து: லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு

Published On 2021-11-28 05:19 GMT   |   Update On 2021-11-28 05:19 GMT
மேற்கு வங்காள மாநிலம், நாடியா மாவட்டத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு சென்றவர்கள் வேன் மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஹன்ஷ்காளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வடக்கு 24 பர்கானஸ் என்ற இடத்தில் இருந்து நபதீப் இறுதிச் சடங்கு இடத்திற்கு உடலை நேற்றிரவு உடலை எடுத்துச் சென்றார்கள்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வேனில் 20-க்கும் மேற்பட்டோர் சென்றார்கள். அப்போது கற்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த அம்மாநில கவர்னர் ஜெக்தீப் தன்கர், இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், 18 பேர் உயிரிழந்த விபத்து குறித்து கேள்விபட்டதும் மிகுந்த வேதனை அடைந்தேன் எனத்தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News