செய்திகள்
அரசுப் பெண்கள் பள்ளி

அரசுப் பெண்கள் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

Published On 2021-11-28 03:51 GMT   |   Update On 2021-11-28 03:51 GMT
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவி வருகிறது.
புவனேஷ்வர்:

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையிலும் பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், கெந்துஜார் மாவட்டம், சமக்பூர் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயூர்பஞ்ச் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ரூபவானு மிஸ்ரா கூறுகையில், “மாணவிகளின் உடல்நிலை சீராக உள்ளது. பள்ளியில் நிலைமையும் கட்டுக்குள் உள்ளது. மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News