செய்திகள்
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது ராணுவம்
என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின், அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
தொடர்ந்து தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
என்கவுண்டர் நடக்கும் பகுதியில் இருந்து பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.