செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனை

போபாலில் பரபரப்பு - மருத்துவமனை குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து

Published On 2021-11-08 18:19 GMT   |   Update On 2021-11-08 18:19 GMT
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
போபால்:

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் கமலா நேரு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு குழந்தைகள் வார்டில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

மருத்துவமனையில் பல குழந்தைகள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி அறிந்த மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வருகிறார்.

விபத்து பற்றி தகவலறிந்ததும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News