செய்திகள்
ஆர்யன் கான்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராகவேண்டும் -ஆர்யன் கானுக்கு கடும் நிபந்தனைகள்

Published On 2021-10-29 10:35 GMT   |   Update On 2021-10-29 13:13 GMT
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஆர்யன் கான் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மும்பை:

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு மும்பை ஐகோர்ட் நேற்று  ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவில், ஆர்யன் கான் ரூ.1 லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையாக ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆர்யன் கான் இதுபோன்ற செயல்களில் (போதைப்பொருள் பயன்படுத்துதல்) ஈடுபடக்கூடாது, இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது, உடனடியாக சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.

ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும்  கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News