செய்திகள்
திலிப் வால்ஸ் பாட்டீல்

மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று

Published On 2021-10-28 05:25 GMT   |   Update On 2021-10-28 06:23 GMT
மகாராஷ்டிரா உள்துறை மந்திரி திலிப் வால்ஸ் பாட்டீல், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை மந்திரியாக இருப்பவர் திலிப் வால்ஸ் பாட்டீல். இவருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திலிப் வால்ஸ் பாட்டீல் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா வைரஸ் தொற்றுக்கான லேசான அறிகுறி தென்பட்டதும், பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்தேன். முடிவில் பாசிட்டிவ் என வந்துள்ளது. என் உடல்நிலை சீராக உள்ளது. நான் எனது மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். நாக்பூர், அமராவதி சுற்றுப் பயணம் மற்றும் இதர நிகழ்ச்சியில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News