செய்திகள்
டிப்பர் லாரி மீது மோதிய பெஸ்ட் பேருந்து- 5 பேர் கவலைக்கிடம்
மும்பையில் இன்று லாரி மீது பேருந்து மோதியதில், டிரைவர் உள்ளிட்ட 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மும்பை:
மும்பை தாதர் பகுதியில் இன்று அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து (பெஸ்ட் பேருந்து), டிப்பர் லாரி மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரி மீது மோதியதில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
#WATCH | Eight people were injured in a collision between a BEST bus and a dumper truck in Dadar area of Mumbai today morning. The condition of five people including driver & conductor of the bus is serious: Municipal Corporation of Greater Mumbai pic.twitter.com/yCwYUQHG7R
— ANI (@ANI) October 27, 2021
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டிரைவர் உள்ளிட்ட 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். லாரி மீது பேருந்து மோதும்போது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.