செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி வரும் 30-ம் தேதி கோவா செல்கிறார்

Published On 2021-10-26 20:07 GMT   |   Update On 2021-10-26 20:07 GMT
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று கூட்டினார்.
புதுடெல்லி:

கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க.வும்,  ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வரும் 30-ம் தேதி கோவா பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ள ராகுல் காந்தி, மீனவர்களையும் சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேச உள்ளார். 


Tags:    

Similar News