செய்திகள்
கைது

கற்பழிப்பு வழக்கில் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் கைது

Published On 2021-10-26 10:45 GMT   |   Update On 2021-10-26 10:45 GMT
மத்திய பிரதேசத்தில் பலாத்கார வழக்கில் ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வின் மகன் கரன் மோர்வாலை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பாத்நகர் தொகுதி எம்.எல்.ஏ. முரளி மோர்வால். இவரது மகன் கரன் மோர்வால் மீது கடந்த ஏப்ரல் மாதம் 2-ம்தேதி அன்று பெண் ஒருவர் இந்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதில், கரன் மோர்வால் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தலைமறைவான கரன் மோர்வால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். மேலும், கரன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த 19-ம்தேதி அன்று கரனின் சகோதரர் சிவமிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று காலை இந்தூரில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஷாகாபூர் மாவட்டம் மக்சி நகர் அருகில் வைத்து கரன் மோர்வாலை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக மகளிர் காவல் நிலைய பொறுப்பாளர் ஜோதி சர்மா கூறியுள்ளார்.
Tags:    

Similar News