செய்திகள்
சித்தராமையா சாதி அரசியல் செய்கிறார்: குமாரசாமி குற்றச்சாட்டு
சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும், தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதி அரசியலில் ஈடுபட்டார் என குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சாதி அரசியலை கொண்டு வந்ததே சித்தராமையா தான். அவர் முதல்-மந்திரியாக வேண்டும், தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதி அரசியலில் ஈடுபட்டார்.
நான் விவசாயம் செய்தது இல்லை என்றும், பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவன் என்றும், ஆடு மேய்ப்பது பற்றி குமாரசாமிக்கு என்ன தெரியும் என்றும் சித்தராமையா சொல்லி இருப்பது பற்றி அறிந்தேன். நான் விவசாயம் செய்கிறேனா, இல்லையா? என்பதை பிடதியில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு வந்து சித்தராமையா பார்த்து கொள்ளட்டும்.
நான் சிறுவயதிலேயே ஆடு மேய்க்க சென்று, ஆட்டு கொட்டகையில் படுத்திருந்தேன். சித்தராமையா தனக்கு தெரியாதை பற்றி எதுவும் பேசக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சாதி அரசியலை கொண்டு வந்ததே சித்தராமையா தான். அவர் முதல்-மந்திரியாக வேண்டும், தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதி அரசியலில் ஈடுபட்டார்.
நான் விவசாயம் செய்தது இல்லை என்றும், பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவன் என்றும், ஆடு மேய்ப்பது பற்றி குமாரசாமிக்கு என்ன தெரியும் என்றும் சித்தராமையா சொல்லி இருப்பது பற்றி அறிந்தேன். நான் விவசாயம் செய்கிறேனா, இல்லையா? என்பதை பிடதியில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு வந்து சித்தராமையா பார்த்து கொள்ளட்டும்.
நான் சிறுவயதிலேயே ஆடு மேய்க்க சென்று, ஆட்டு கொட்டகையில் படுத்திருந்தேன். சித்தராமையா தனக்கு தெரியாதை பற்றி எதுவும் பேசக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.