செய்திகள்
மம்தா கட்சியில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்

சிலிகுரி: உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

Published On 2021-10-25 13:09 GMT   |   Update On 2021-10-25 13:09 GMT
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்கள், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் களப் பணிகளில் இறங்கியுள்ளன. இதற்கிடையே தலைவர்கள் கட்சிகள் மாறும் சம்பவம் நடைபெற தொடங்கியுள்ளது.

இன்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்கள், சிலிகுரியில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி உடனிருந்தார்.
Tags:    

Similar News