செய்திகள்
ராஜ் தாக்கரே

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-10-23 22:27 GMT   |   Update On 2021-10-23 22:27 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவா் ராஜ் தாக்கரே சமீபத்தில் நாசிக், புனே, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசினார். 

அடுத்த ஆண்டு பல்வேறு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், மும்பையிலும் மூத்த நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜ் தாக்கரேவின் தாய் குந்தா தாக்கரேவுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
 
இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், 2 பேரும் தாதரில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். 

Tags:    

Similar News