செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

Published On 2021-10-23 17:44 GMT   |   Update On 2021-10-23 17:44 GMT
தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.  மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இது முதல்  முறையாகும். 

ஏற்கனவே, அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி  அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். 

Tags:    

Similar News