செய்திகள்
மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா உடன் டி.ஆர். பாலு சந்திப்பு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி, தமிழகத்திற்கு சம்பா பருவத்திற்கான உரத்தை வழங்கிட டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. மக்களவை குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலு இன்று ரசாயனம் மற்றும் உரத்துறைக்கான மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது தமிழகத்திற்கு உரம் வழங்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
மு.க. ஸ்டாலின் கடிதத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான 1.59 மெட்ரிக் டன் யூரியா உள்பட உரங்களை வழங்கக்கோரி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.