செய்திகள்
வடக்கு வங்காளத்தில் தொடர் மழை- விமானங்கள் ரத்து, சுற்றுலாப் பயணிகள் தவிப்பு
லாவா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக சுமார் 70 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
கலிம்போங்:
வடக்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரமாக இடைவிடாமல் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைப்போக்குவரத்து முடங்கி உள்ளது. ஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தால் பல்வேறு பாலங்கள் சேதமடைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத்தாண்டி ஓடுகிறது. இதனால் வங்கதேச எல்லைப்பகுதி கிராமங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வடக்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் டீஸ்டா மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
கலிம்போங்கில் மரம் முறிந்து கார் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். லாவா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக சுமார் 70 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். பாக்தோக்ரா விமான நிலையத்திற்கு இயக்கப்படவிருந்த 33 விமானங்களில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... வடகிழக்கு பருவமழை 26-ந்தேதி தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு