செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் ரூ.3 கோடி உண்டியல் வசூல்

Published On 2021-10-19 05:07 GMT   |   Update On 2021-10-19 05:07 GMT
கொரோனா விதிமுறைகளின்படி திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி:

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றிற்கு பக்தர்கள் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளின்படி திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். திருப்பதியில் நேற்று 28,513 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,707 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.01 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

பிரம்மோற்சவ நாட்களில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையே உண்டியல் வசூலானது. இந்த நிலையில் தற்போது ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது .
Tags:    

Similar News