செய்திகள்
பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச பொதுமக்களிடம் யோசனை கேட்கிறார் பிரதமர் மோடி

Published On 2021-10-16 23:19 GMT   |   Update On 2021-10-16 23:19 GMT
பிரதமர் மோடி அக்டோபர் 24-ம் தேதி வானொலியில் உரையாற்ற உள்ள மன் கி பாத் நிகழ்ச்சி 82-வது நிகழ்ச்சி ஆகும்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பார்.
 
இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மன் கி பாத் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி ஒலிபரப்பாகிறது. இதில், தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்த மாதம் 24-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒலி பரப்பாகிறது. இந்த மாத நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன். அவற்றை நீங்கள் நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News