செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த இரு என்கவுண்டரில் மொத்தம் 9 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரின் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பானிபூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார். இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர்.
இதேபோல், புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். இவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகரை சேர்ந்தவர். படுகாயமடைந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் காஷ்மீர் மண்டல போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...பிஎஸ்எப் அதிகார வரம்பு விவகாரம்- அமித் ஷாவை சந்திக்கிறார் சரத் பவார்