செய்திகள்
சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற சிறப்பு ரெயிலில் வெடிவிபத்து: 4 வீரர்கள் காயம்
சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற சிறப்பு ரெயிலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு வீரர்கள் காயம் அடைந்தனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சிறப்பு ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைக்கப்பட்ட பெட்டி தரையில் விழுந்தது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.