செய்திகள்
மலர் தூவி மரியாதை செய்த அமித்ஷா

சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமித் ஷா

Published On 2021-10-15 22:56 GMT   |   Update On 2021-10-15 22:56 GMT
அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சென்ற உள்துறை மந்திரி அமித்ஷா, வீர சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டார்.
போர்ட் பிளேர்:

மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமாவன அமித்ஷா 3 நாள் பயணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் ஜோஷி வரவேற்றார்.

இந்நிலையில், தேசிய நினைவு சிறைச்சாலைக்கு சென்ற அமித்ஷா, அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்ட அமித்ஷா, அங்கிருந்த சாவர்க்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News