செய்திகள்
விபத்து

பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்தது- 11 பேர் பலியான சோகம்

Published On 2021-10-15 11:48 GMT   |   Update On 2021-10-15 14:40 GMT
தசரா பண்டிகை நாளில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
ஜான்சி:

உத்தர பிரதேச மாநிலம்  ஜான்சி மாவட்டம், சிர்கான் பகுதியில் சுமார் 30 பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த கால்நடைகள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ஸ்டியரிங்கை திருப்பியதால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இதில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தசரா பண்டிகை நாளில் நடந்த இந்த துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News