செய்திகள்
கோப்புப் படம்

சோபியான் என்கவுண்டர் - 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

Published On 2021-10-12 00:21 GMT   |   Update On 2021-10-12 00:21 GMT
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் அப்பாவி பொதுமக்கள் 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
  
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News