செய்திகள்
பிரதமர் மோடி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

Published On 2021-10-08 19:59 GMT   |   Update On 2021-10-09 01:04 GMT
ஜப்பான் நாட்டில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான மந்திரிசபை கடந்த மாதம் பதவியேற்றுள்ளது.
புதுடெல்லி:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். அதை தொடர்ந்து, அவரது தலைமையிலான புதிய மந்திரி சபை பதவியேற்றது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிடம் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.



இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு வாழ்த்து கூறினேன். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விருப்பத்தை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News