செய்திகள்
ராகுல் காந்தி

விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-10-06 05:32 GMT   |   Update On 2021-10-06 08:41 GMT
உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

* விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.

* மத்திய அரசு விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது.

* உத்தரபிரதேசம் செல்ல எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் மற்ற கட்சிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



* உத்தரபிரதேசத்தில் அபாயகரமான அரசியல் நடைபெற்று வருகிறது.

* நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை.

* லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளேன்.

உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.


Tags:    

Similar News