செய்திகள்
209 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு சரிவு
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 149 பேர் உள்பட நேற்று 263 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,49,260 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இது கடந்த 209 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும்.
கடந்த சில மாதங்களாக நாள்தோறும் 11 லட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்யப்பட்டும் வரும் நிலையில், விடுமுறை நாளான நேற்றுமுன்தினம் பரிசோதனை 9.91 லட்சமாக குறைந்திருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,850, மகாராஷ்டிராவில் 3,165, தமிழ்நாட்டில் 1,467 மிசோரத்தில் 1,681 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 149 பேர் உள்பட நேற்று 263 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,49,260 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் நேற்று 72,51,419 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 கோடியே 54 லட்சமாக உயர்ந்தது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இது கடந்த 209 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும்.
கடந்த சில மாதங்களாக நாள்தோறும் 11 லட்சத்திற்கும் மேல் பரிசோதனை செய்யப்பட்டும் வரும் நிலையில், விடுமுறை நாளான நேற்றுமுன்தினம் பரிசோதனை 9.91 லட்சமாக குறைந்திருந்தது. இதுவும் தினசரி பாதிப்பு இந்த அளவில் குறைவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,850, மகாராஷ்டிராவில் 3,165, தமிழ்நாட்டில் 1,467 மிசோரத்தில் 1,681 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 149 பேர் உள்பட நேற்று 263 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,49,260 ஆக உயர்ந்தது.
நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 29,639 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,52,902 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 57.53 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 11,41,642 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... குரங்கால் பெய்த பண மழை