செய்திகள்
பிரதமர் மோடி

ஆசாதி 75 - புதிய நகர்ப்புற இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

Published On 2021-10-04 22:52 GMT   |   Update On 2021-10-04 22:52 GMT
உ.பி.யில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற வீடுகள் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 'ஆசாதி75 - புதிய நகர்ப்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

அங்குள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் மோடி டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார். அதன்பின், இந்த திட்டத்தின் பயனாளிகளுடன்  உரையாடுகிறார்.

அதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும்  உத்தர பிரதேசத்தின் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

Tags:    

Similar News