செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசார்:
அருணாசல பிரதேசத்தின் பசார் நகரில் நள்ளிரவு 12.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கடந்த 2-ம் தேதி இதே பசார் நகரில், ரிக்டரில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்...கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மனி ஒப்புதல் அளிக்குமா?