செய்திகள்
தூய்மை இந்தியா திட்டம் 2.0 - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
குப்பை இல்லாத நகர்ப்புறம் என்பதை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற வகையில் உருவாக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 யை இன்று தொடங்கி வைத்தார். மேலும், அவர் நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துயிருக்கான அடல் மிஷன் 2.0 யையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மேம்பாட்டு மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் அனைத்து நகரங்களையும் 'குப்பை இல்லா' மற்றும் 'நீர் பாதுகாப்பான' நகரங்களாக மாற்றுவதே இந்த திட்டங்களின் நோக்கங்கள் ஆகும்.