செய்திகள்
ராணுவ மந்திரியுடன் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்திப்பு
இந்திய விமானப்படையின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இன்று பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
இந்திய விமானப்படையின் தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2001-ம் ஆண்டு முதல் விமானப்படையின் பல்வேறு நிலைகளில் பதவி வகித்தவர் விவேக் ராம் சவுத்ரி. 2019-ம் ஆண்டில் இருந்து ஷில்லாங்கில் உள்ள கிழக்கு கமாண்டிங் படைப்பிரிவில் சீனியர் ஏர் ஸ்டாப் ஆபீசராக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே, வி.ஆர்.சவுத்ரி விமானப் படைப்பிரிவு தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி இன்று மாலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதையும் படியுங்கள்...அடுத்த கட்ட நகர்வு என்ன ? சொல்கிறார் அமரீந்தர் சிங்