செய்திகள்
இன்று காலை 81வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், 81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை தொடங்க இருக்கிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. சபை உரை, அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...பிரதமர் மோடியிடம் இந்தியாவுக்கு சொந்தமான 157 கலைப்பொருட்கள் ஒப்படைப்பு