செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கண் அறுவை சிகிச்சை

Published On 2021-09-25 05:04 GMT   |   Update On 2021-09-25 05:04 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ராணுவ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அதன் பின் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ராணுவ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News