செய்திகள்
கோப்புப்படம்

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-21 12:46 GMT   |   Update On 2021-09-21 12:46 GMT
ஆந்திராவில் தற்போது வரை 13,905 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,179 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,651 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 20,40,708 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20,12,714 பேர் குணமடைந்துள்ளனர். 14,089 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 13,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News