செய்திகள்
பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழாவில் ராகுல் பங்கேற்பாரா?
எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில் கட்சியின் சில தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் உச்சகட்டத்தை எட்டியது. அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், அமரிந்தர் சிங்குக்கு எதிராக மாறிய நிலையில் அமரீந்தர் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக தலைவராக (முதல்வராக) சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி (வயது58) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமரீந்தர் சிங் மந்திரிசபையில் தொழில்கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்த தலித் தலைவர் ஆவார்.
புதிய முதல்வரின் பதவியேற்பு விழா இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. எளிமையாக நடைபெறும் இந்த விழாவில் கட்சியின் சில தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.