செய்திகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது- சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனமழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவின் பரவலாக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
புதுடெல்லி:
வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய பிரதேசத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை 5:30 மணியளவில் வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது வடக்கு மத்திய பிரதேசம் முழுவதும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.