செய்திகள்
வானிலை நிலவரம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது- சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-09-15 04:13 GMT   |   Update On 2021-09-15 04:13 GMT
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவின் பரவலாக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
புதுடெல்லி:

வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய பிரதேசத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று காலை 5:30 மணியளவில் வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக வலுவிழந்தது. இது வடக்கு மத்திய பிரதேசம் முழுவதும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
Tags:    

Similar News