செய்திகள்
கோப்புபடம்

உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு முடிவு

Published On 2021-09-12 20:54 GMT   |   Update On 2021-09-12 20:54 GMT
உத்தரகாண்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 1,000 இடங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, உத்தரகாண்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 1,000 இடங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.



இதனால், வருகிற 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்ற அரசின் இலக்கு எட்டப்படும்.  கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை.  வருகிற டிசம்பருக்குள் 100 சதவீத தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News