செய்திகள்
வருமான வரித்துறை

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

Published On 2021-09-10 02:42 GMT   |   Update On 2021-09-10 02:43 GMT
டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

2021-2022-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருந்தது. கொரோனா தொற்று மற்றும் புதிய இணையதள அறிமுகம் செய்ததற்காக இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த அவகாசம் மீண்டும் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தரப்பிலான கணக்குகள் தாக்கல் செய்யவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல்களை டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News