செய்திகள்
சிவசேனா

மத்திய மந்திரி நாராயண் ரானேயை பதவி நீக்க வேண்டும்: மோடிக்கு, சிவசேனா கடிதம்

Published On 2021-08-25 04:18 GMT   |   Update On 2021-08-25 04:18 GMT
நாராயண் ரானே பேசிய விதம் நாட்டின் பிரதமரையும் அவமதிக்கிறது. எனவே அவரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அல்லது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.
மும்பை :

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந்திருப்பேன் என்று கூறிய நாராயண் ரானேயை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. விநாயக் ராவத் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், "தான் வகிக்கும் பதவியின் மாண்பை மறந்த நாராயண் ரானே போன்றவர்கள் பதவியில் நீடிக்க உரிமையில்லை என நம்புகிறேன். அவர் பேசிய விதம் நாட்டின் பிரதமரையும் அவமதிக்கிறது. எனவே அவரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அல்லது பதவியில் இருந்து நீக்க வேண்டும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News