செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்- கெஜ்ரிவால்

Published On 2021-08-03 15:42 GMT   |   Update On 2021-08-03 15:42 GMT
டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது.
டெல்லியில் நங்கல் என்ற இடத்தில் 9 வயதி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உடல் எரியூட்டப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனம் எழுப்பி வருகின்றனர். பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால், உள்துறை அமைச்சரான அமித் ஷா, இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ‘‘டெல்லியில் 9 வயது சிறும் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அவமானம். டெல்லியின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News