செய்திகள்
கேரளா

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- கேரளாவுக்கு மத்திய குழு விரைவு

Published On 2021-07-29 05:34 GMT   |   Update On 2021-07-29 07:44 GMT
கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்யும்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 22,000-க்கும் மேல் பதிவாகி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா கட்டுக்குள் இருக்கும்நிலையில் கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.



இதற்கிடையில் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, வருகிற சனி, ஞாயிறு (ஜூலை 31, ஆக.1) நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Tags:    

Similar News