செய்திகள்
கட்டிட தொழிலாளி ஷிஜூ

கட்டிட தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்- லாட்டரியில் விழுந்த பரிசு எவ்வளவு தெரியுமா?

Published On 2021-07-28 09:57 GMT   |   Update On 2021-07-28 09:57 GMT
கேரள அரசின் விஷூ பம்பர் லாட்டரி குலுக்கல் சீட்டில் கட்டிட தொழிலாளிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதில் அவரது குடும்ப கஷ்டம் தீரும் என தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வடகரா பகுதியைச் சேர்ந்தவர் ஷிஜூ. கட்டிட தொழிலாளி

மிகவும் ஏழ்மமையான குடும்பத்தை சேர்ந்த ஷிஜூ அடிக்கடி கேரள மாநில லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்தார். சமீபத்தில் கேரள அரசின் விஷூ பம்பர் லாட்டரி குலுக்கல் சீட்டு ஒன்று வாங்கினார். இதன் குலுக்கல் கடந்த 22-ந்தேதி நடந்தது. இதில் ஷிஜூ வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுந்தது.

இது குறித்து ஷிஜூ யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் முதல் பரிசு பெற்ற நபர் யார்? என அனைவரும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஷிஜூ, அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு பரிசு விழுந்த லாட்டரி சீட்டுடன் சென்றார். அங்கு தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளது என்று கூறி லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.


அதன்பின்புதான் ஷிஜூ வுக்கு கேரள பம்பர் லாட்டரியில் ரூ.10கோடி பரிசு விழுந்தது அனைவருக்கும் தெரியவந்தது. இது குறித்து ஷிஜூ கூறியதாவது:-

நான் அடிக்கடி கேரள லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்தேன். இதுவரை பெரிய அளவில் பரிசு விழவில்லை. இப்போதும் பரிசு விழும் என நினைக்கவில்லை. இம்முறை நான் எதிர்ப்பார்க்காத நிலையில் ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இனி என் கஷ்டங்கள் தீர்ந்து விடும். பரிசு பணத்தில் எங்கள் குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News