செய்திகள்
மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்: குமாரசாமி
நான் 2 முறையும் அதிர்ஷ்டத்தால் தான் முதல்-மந்திரி ஆனேன். சாமுண்டீஸ்வரி ஆசி இருக்கும் வரை நான் மக்கள் பணியாற்றுவேன். மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்.
ராமநகர் :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனாவால் இறந்த பி.பி.எல். குடும்பங்களை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு இதுவரை அரசாணை பிறப்பிக்கவில்லை. எடியூரப்பா பதவி விலகியதால் எங்கள் கட்சிக்கு லாபமா? என்பது குறித்து பேச விரும்பவில்லை.
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய அரசு இல்லை. இது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு மேலும் அடி விழுவது போல் உள்ளது. நான் 2 முறையும் அதிர்ஷ்டத்தால் தான் முதல்-மந்திரி ஆனேன். நான் நல்ல பணிகளை மேற்கொண்டேன். சாமுண்டீஸ்வரி ஆசி இருக்கும் வரை நான் மக்கள் பணியாற்றுவேன். மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனாவால் இறந்த பி.பி.எல். குடும்பங்களை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு இதுவரை அரசாணை பிறப்பிக்கவில்லை. எடியூரப்பா பதவி விலகியதால் எங்கள் கட்சிக்கு லாபமா? என்பது குறித்து பேச விரும்பவில்லை.
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய அரசு இல்லை. இது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு மேலும் அடி விழுவது போல் உள்ளது. நான் 2 முறையும் அதிர்ஷ்டத்தால் தான் முதல்-மந்திரி ஆனேன். நான் நல்ல பணிகளை மேற்கொண்டேன். சாமுண்டீஸ்வரி ஆசி இருக்கும் வரை நான் மக்கள் பணியாற்றுவேன். மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.