செய்திகள்
மரணம்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி

Published On 2021-07-27 08:25 GMT   |   Update On 2021-07-27 08:25 GMT
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் திடீரென மயங்கி விழுந்தனர்.

அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.

மேலும் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாராயத்தை விற்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News