செய்திகள்
ஜிகா வைரஸ்

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 42 ஆக உயர்வு

Published On 2021-07-22 04:13 GMT   |   Update On 2021-07-22 04:13 GMT
பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு மேலும் சிலருக்கு நோய் பரவியது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா வைரஸ்  இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் வேகமாக பரவி வருகிறது. பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு மேலும் சிலருக்கு நோய் பரவியது.

இதையடுத்து நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் வரை  37 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு  இருப்பது தெரிய வந்தது. நேற்று மேலும் 5  பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் இதுவரை 42 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
Tags:    

Similar News