செய்திகள்
யோகா செய்த முன்னாள் மத்திய மந்திரி மயக்கம் - ஐ.சி.யூ.வில் அனுமதி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மங்களூரு:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மற்றும் எம்.பி.யான ஆஸ்கர் பெர்னாண்டஸ் நேற்று முன்தினம் யோகா செய்தபோது திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அவரை மீட்டு கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஐ.சி.யூ.வில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.